1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai marina closed?

மெரீனா மூடப்படுமா? சென்னை மாநகராட்சி எச்சரிக்கையால் பரபரப்பு

சென்னை
மெரீனா மூடப்படுமா? சென்னை மாநகராட்சி எச்சரிக்கையால் பரபரப்பு
சென்னை மெரினா கடற்கரையில் சமீபத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் மெரினாவை மூடும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மெரினாவுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது சென்னை மெரினாவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இதனை அடுத்து சென்னை மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மெரினாவில் குவிந்தனர். இந்த நிலையில் கட்டுக்கடங்காத கூட்டம் மெரினாவில் குவிந்து வருவதை அடுத்து மக்கள் மிக அதிக அளவுக்கு மீறி கூடினால் சென்னை மெரினாவை மீண்டும் மூடப்படும் நிலை ஏற்படும் என சென்னை மாநகராட்சியின் துணை மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி: தமிழக அரசு அறிவிப்பு!