வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (11:46 IST)

சென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து: கார் மீது மோதி பயங்கர விபத்து

சென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து கார் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் காரில் பயணித்தவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினா சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகரப் பேருந்து, ஒரு மாருதி கார் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இதில் காரில் பயணித்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாநகர பேருந்தின் டிரைவரை கைது செய்தனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் மெரினா சாலையே பரபரப்பாக காணப்பட்டது.