தொடர்புடைய செய்திகள்
- சென்னை வெள்ள பாதிப்பு: தள்ளிப்போகும் கூச முனிசாமி வீரப்பன் சீரிஸ்!
- குறை சொல்வதை விட இறங்கி வேலை செய்யலாம்! – சென்னை வெள்ளம் குறித்து கமல்ஹாசன் கருத்து!
- வெள்ளத்தில் பாதித்த வாகனங்களுக்கு இலவச சர்விஸ்! – TVS நிறுவனம் அறிவிப்பு
- தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் 6 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!
- வேளச்சேரி எம் எல் ஏ வை முற்றுகையிட்ட பொதுமக்கள்… சரமாரி கேள்வி!
சென்னையில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையின்றி ஒத்திவைப்பு..!
சென்னையில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் டிசம்பர் 15, 16 தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டு சென்னை தீவுத்திடல் அருகே தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், எந்த தேதியும் குறிப்பிடாமல் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சென்னை கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். அவர், கார் பந்தயம் நடத்த ரூ.240 கோடி திமுக அரசு செலவிடுவது ஏன்? ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்கு நிதியில்லாமல் இருக்கும் நிலையில், பந்தயத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார்.
Edited by Mahendran
