தொடர்புடைய செய்திகள்
- குளக்கரையில் உல்லாசமாக இருந்த காதலர்கள்! – எட்டி பார்த்த சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!
- நாளை நண்பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம்: மீண்டும் தீவிர பொதுமுடக்கமா?
- இந்தியாவில் 3.20 லட்சம் பேருக்கு கொரோனா! – மாநிலவாரி நிலவரம்
- சென்னை மருத்துவமனை டீனுக்கு கொரோனா! – பொறுப்பை ஏற்கும் மருத்துவ கல்வி இயக்குனர்!
- கொரோனாவில் மறைந்த தொண்டருக்காக கமல் எழுதிய கவிதை
30 ஆயிரத்தை தாண்டிய சென்னை பாதிப்புகள்! – மண்டல நிலவரம்!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 50 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், சென்னையில் பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,056 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தண்டையார்பேட்டையில் 3,928 பேருக்கும், தேனாம்பேட்டையில் 3,652 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 3,269 பேருக்கும், அண்ணா நகரில் 2,960 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் உள்ளன. இவை தவிர திருவொற்றியூர், அம்பத்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கொரோனா பாதிப்புகள் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. பெரும்பாலாம சென்னைக்கு உட்பட்ட மண்டலங்கள் ஆயிரத்தை நெருங்கி வருகின்றன.
அடுத்த கட்டுரையில்
