1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2023 (12:30 IST)

ஆளுனர் மாளிகை குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்: வானதி சீனிவாசன்

நேற்று ஆளுநர் மாளிகையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. அமைப்புக்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
நேற்று மாலை ஆளுநர் ரவி மாளிகையில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 
 
இதுகுறித்து கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறிய போது ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை, ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
 
மேலும் பெட்ரோல் குண்டு வீசும் முயற்சி என்பது தனி நபரின் முயற்சியாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Siva