தொடர்புடைய செய்திகள்
- கோவையில் ஓட்டுக்கு பணம்; காங்கிரஸ் – நாம் தமிழர் இணைந்து போராட்டம்!
- வரிசையில் காத்திருந்து ஓட்டளித்த நட்சத்திரங்கள் யார் யாருன்னு பாருங்க!
- தனது தொகுதியில் பேரனோடு சென்று வாக்களித்த எடப்பாடியார்!
- பெட்ரோல் விலை உயர்வை குத்தி காட்டிய விஜய்? – ட்ரெண்டாகும் சைக்கிள் பயணம்!
- வாக்குச்சாவடிக்கு காய்ச்சலுடன் வந்த நபர்கள்; மக்கள் அதிர்ச்சி! – திருவண்ணாமலையில் பரபரப்பு!
வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து பலர் காயம் – முதுகுளத்தூரில் பரபரப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் மும்முரமாக நடந்து வரும் நிலையில் முதுகுளத்தூரில் வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் சில இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு பணி தாமதமாகி வருகிறது. இந்நிலையில் முதுகுளத்தூர் கண்டிலான் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 4 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
