1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (10:23 IST)

சிறுவன் சுர்ஜித் : துளையிடும் இடத்தில் பாறைகள் இருப்பதால் மீட்பில் தொய்வு

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியச் சேர்ந்த குழந்தை சுர்ஜித் நேற்று முன்தினம் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.  அன்று முதல்  தமிழக அரசு, தன்னார்வலர்கள் மீட்புக்குழுவினர் , தீயணைப்புப்படையினர் என பல்வேறு தரப்பினர் குழந்தை மீட்கும் பணியில் ஈட்டுட்டுள்ளனர். 
முன்னதாக 5 குழுக்களால் முயன்றும் குழந்தையை மீட்க முடியவில்லை. எனவே தற்போது 6 ஆவது குழு முயன்று வருகிறது. 
 
குழந்தை சுர்ஜித் கிணற்றில் விழுந்து 40  மணிநேரமாகிவிட்டது. அவரை  மீட்கும் பணி முழு வீச்சில் தீவிரமாக நடைபெற்று வரிகிறது.
 
குழந்தை கிணற்றுக்குள் 100 அடிக்கு கீழே சிக்கிக் கொண்டிருப்பதால், அதற்கு அருகிலேயே,  இன்னொரு குழி தோண்டி அதில் மூன்று தீயணைப்பு வீரர்கள் இறங்கி, பக்கவாட்டின் வழியே குழந்தையை மீட்க திட்டமிட்டுள்ளனர். 
 
ஆனால், 27 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் அதிக அளவு இருந்ததால் குழந்தையை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் ஒ.என்.ஜி.சி.நிறுவனத்திலிருந்து ரிக் மெஷின் கொண்டுவரப்பட்டு குழந்தையை மீட்கவும் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள மக்களின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதுதான்.,