1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 மார்ச் 2024 (17:30 IST)

விருதுநகரில் சுயேட்சையாக களமிறங்கிய பாஜக நிர்வாகி.. மனுவை வாபஸ் பெற பேச்சுவார்த்தை..!

விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடும் நிலையில் சீட் கிடைக்காத அதிருப்தி காரணமாக பாஜக நிர்வாகி சுயேட்சையாக கடைசி நேரத்தில் திடீரென வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருதுநகர் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் மற்றும் வேதா தாமோதரன் ஆகியோர் விருப்பமனு அளித்திருந்தனர் 
 
இந்த நிலையில் வேதா தாமோதரன் என்பவர் தனக்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதை அடுத்து அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது 
இந்த நிலையில் ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்த அவர் திடீரென சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி உள்ளார் 
 
டெல்லி பாஜக மோடி அணி என்ற பெயரில் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக சார்பில் நான் போட்டியிடவில்லை என்றும் டெல்லி பாஜக சார்பில் நான் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்றும் அவர் பேட்டி அளித்துள்ளார். இந்த நிலையில் வேதா தாமோதரனை மனுவை வாபஸ் பெற வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை என்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran