1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Arabic sea new cyclone named as Dav de

அரபிக்கடலில் நாளை உருவாகிறது டவ்-தே புயல்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

National
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான சூழலில் நாளை அது புயலாக மாறுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் இது நாளை புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இது குஜராத் நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
நேரு மைதானத்தில் ரெம்டெசிவிர்; ஒருநாளைக்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி!