தொடர்புடைய செய்திகள்
- 7 வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு.. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட இல்லை: ஈரோடு தேர்தல் வினோதம்..!
- விவேக் ராமசாமி: அமெரிக்க அதிபர் பதவிக்கு ட்ரம்புடன் மோதும் கோடீஸ்வர இந்தியர்
- அதிமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு: ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம்..!
- திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
- வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், மக்கள் தீர்ப்பை தலைவணங்கி வரவேற்கிறோம்: அண்ணாமலை
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த போது ஈரோடு கிழக்கு தேர்தல் மக்கள் முடிவை நாங்கள் தலைவணங்கி ஏற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து சில நாட்கள் குழப்பமான சூழல் இருந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மௌனம் கலைத்த பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் அவர் ஒரு சில நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இந்த தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிட்டு இருந்தால் கடும் சவாலாக இருந்திருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
