தொடர்புடைய செய்திகள்
- ”வாய் கிழிய பேசுனா மட்டும் பத்தாது..” – அண்ணாமலைக்கு டிடிவி கேள்விகள்!
- தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் மட்டும் நடைபெறும் யுத்தம்: அண்ணாமலை பேச்சு
- நுனி கிளையில் உட்கார்ந்து, அடிக்கிளை வெட்டுகிறார்: ஜெயகுமாருக்கு பாஜக கண்டனம்..!
- அண்ணாமலை உண்மை மட்டுமே பேசுவார்.. ஜெயலலிதா ஊழல்வாதி என்ற கேள்விக்கு குஷ்பு பதில்..!
- டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பூரான்: அதிர்ச்சியில் குடிமகன்..!
டாஸ்மாக் மது அருந்திய இருவர் மீண்டும் மரணம்.. 10 ரூபாய் வசூலில் மட்டுமே குறியா? அண்ணாமலை
டாஸ்மாக் மது அருந்திய இருவர் மீண்டும் மரணம் அடைந்துள்ள நிலையில் 10 ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருப்பதாக அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மயிலாடுதுறை அருகே, டாஸ்மாக் மது அருந்தியதால், மீண்டும் இருவர் மரணம் அடைந்துள்ளதாக நாளிதழில் வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சாராயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் தமிழக அரசு, இம்முறை என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது?
பொதுமக்களின் உயிருக்குச் சிறிதும் மதிப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பது போல் நடித்ததன் விளைவு, மீண்டும் இரு உயிர்கள்.
உடனடியாக, சம்பந்தப்பட்ட மது ஆலையை மூட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அந்த ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், மக்கள் உயிரைப் பற்றிக் கவலையில்லாமல், பத்து ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் தமிழக பாஜக
சார்பாக வலியுறுத்துகிறேன்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
