தொடர்புடைய செய்திகள்
- மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு: பாமக கண்டனம்
- குளிர்பதனப் பெட்டி இல்லாத சமையலறைகள்: அன்புமணி அட்வைஸ்
- ரூ.30 லட்சம் கடன் வாங்கி....ஆன்லைன் ரம்மி விளையாடிய ஐடி ஊழியர் தற்கொலை
- மாணவர் சேர்க்கையை உடனே தொடங்குங்கள்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
- கலைஞர்தான் எனக்கு ரொம்ப பிடித்த தலைவர்! – அன்புமணி ராமதாஸ் புகழாரம்!
அடுத்தடுத்த நாட்களில் சூதாட்ட தற்கொலை: அரசுக்கு அன்புமணி முக்கிய கோரிக்கை
அடுத்தடுத்த நாட்களில் சூதாட்ட தற்கொலை நடந்துள்ளதை அடுத்து தமிழக அரசுக்கு அன்புமணி முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம் தாந்தோனிமலையைச் சேர்ந்த சஞ்சய் என்ற 23வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் தினமும் நடக்கும் நிகழ்வுகளாக மாறி வருகின்றன. சென்னையில் பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதற்கு அடுத்த நாளே கரூர் மாவட்டத்தில் அடுத்த தற்கொலை நிகழ்ந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பிந்தைய 10 மாதங்களில் நடக்கும் 23-ஆவது தற்கொலை இதுவாகும். இது தொடர்கதையாக அனுமதிக்கக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்!
