வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (11:36 IST)

38 வயது ஆண்ட்டி: கல்யாணமாகாத விரக்தி: தோஷம் கழிப்பதாக கூறி ஜோசியர் செய்த வேலை

தோஷம் கழிப்பதாக கூறி ஜோசியர் ஒருவர் பெண்ணின் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் பார்த்தசாரதி(38). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் கடும் விரக்தியில் இருந்து வந்தார். மேலும் இவருக்கு ஏதோ தோஷம் இருப்பதாக தெரிகிறது.
 
தோஷம் கழித்தாலாவது திருமணம் நடைபெறும் என்ற எண்ணத்தில் அந்த பெண் ஒரு ஜோசியரிடம் சென்றுள்ளார். அந்த ஜோசியர் அந்த பெண்ணிடம் கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலியை சாமியின் கழுத்தில் போடுமாறு கூறியுள்ளார் அவர் செயினை கழற்றியபோது அந்த போலி சாமியார் பெண்ணின் நகையை திருடிக்கொண்டு ஓடிவிட்டார். 
 
அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் அந்த போலி சாமியாரை தேடி வருகின்றனர்.