அம்மா மருந்தகங்கள் கடந்த சில மாதங்களாக முறையாக நடத்தப்படாதது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அம்மா மருந்தகங்கள் மூடப்படுவது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை :- ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் வேதனை அளிக்கிறது. தரமான மருந்துகளைக் குறைவான விலையில் தமிழக மக்களுக்கு வழங்க...