1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 மே 2020 (16:02 IST)

தமிழ்நாடு to பாண்டிச்சேரி- வரலாற்றை மாற்றிய கொரோனா!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விட்ட நிலையில் இங்கிருந்து பாண்டிச்சேரிக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து நேற்று முதல்நாள் கடையை திறந்து தமிழக அரசு 176 கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளது. இதற்கே சென்னையில் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாண்டிச்சேரியில் இன்னும் கடை திறக்கப்படாததால் தமிழகத்தில் இருந்து அங்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகின. சாதாரண நாட்களில் விலைக் கம்மியாக இருப்பதால் பாண்டிச்சேரியில் இருந்துதான் தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படும். ஆனால் இப்போது கொரோனாவால் இந்த வழக்கம் மாறி தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்தப்பட்டுள்ளது.