தொடர்புடைய செய்திகள்
- சட்டவிரோத மது விற்பனையால் இன்னும் எத்தனை உயிரிழப்புகள் நிகழுமோ என மக்கள் அச்சம் - எடப்பாடி பழனிசாமி
- விஷச்சாராயம் அருந்தி அருந்தி 3 பேர் உயிரிழந்த விவகாரம்: ஆளுனரை சந்தித்த ஈபிஎஸ்..!
- கள்ளச்சாராய மரணம் எதிரொலி: மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!
- கள்ளச்சாராய விற்பனை-பாஜகவினர். கண்டன ஆர்ப்பாட்டம்!
- கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த விவகாரம் - திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!
மே 29ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
மே 29ஆம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கள்ளச்சாராயம் உயிர் இழப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் கவர்னர் காலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பேரணியாகச் சென்று கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்தார்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் மே 29ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று நடைபெறும் என்றும் கள்ளச்சாராய உயிர் இழப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுவரை எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால் அதிமுகவும் அரசை எதிர்த்து போராட்டம் செய்ய தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
