தொடர்புடைய செய்திகள்
- தீ விபத்தில் சிக்கிய பலரை காப்பாற்றிய சிறுவன்..! கடவுள் ரூபத்தில் வந்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்.!
- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை..! 20 மணி நேரம் போராடி உயிருடன் மீட்பு..!!
- கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர்.. ஒரு நிஜ ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’
- விமான நிலையத்தில் அணுக் கதிர்வீச்சு மற்றும் ரசாயன பொருட்கள் நச்சு அபாயத்திலிருந்து பயணிகளை மீட்பது மற்றும் மருத்துவ முதலுதவி அளிப்பது குறித்து-பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை!
- சாலை விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் 4 உயிரிழப்பு: நிவாரண நிதி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்..!
கோத்தகிரி மலைப்பாதையில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்!
சென்னை பகுதியை சார்ந்த 31 நபர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ரயில் மூலம் மேட்டுப்பாளையம் வந்தடைந்தனர்.
மேட்டுப் பாளையத்தில் இருந்து வாடகைக்கு மினி பேருந்து எடுத்து இரண்டு நாள் உதகைக்கு சுற்றுலா சென்றனர்.
சுற்றுலா முடித்துவிட்டு கோத்தகிரி வழியாக வரும்போது பவானிசாகர் வியூ பாயிண்ட் பகுதியில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது விபத்து ஏற்பட்டது.
இதில் 16 பெரியோர்கள் மற்றும் 15 குழந்தைகள் என காயமடைந்தனர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் படுகாயம் அடைந்தவர்களை அவசர சிகிச்சைக்காக 7 பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
