தொடர்புடைய செய்திகள்
- விழுப்புரத்தை அடுத்து கரூரிலும் கோயிலுக்கு சீல் வைப்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
- ஆவின் நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்திய விவகாரம்: அண்ணாமலை அதிர்ச்சி..!
- தினமும் சுமார் 2500 லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருட்டு....ஆட்சியாளர்கள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை - டிடிவி. தினகரன்
- வேலூர் ஆவின் பால் பண்ணை பால் திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு? டாக்டர் ராமதாஸ் கேள்வி..!
- ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள், தினமும் 2500 லிட்டர் பால் மோசடி..!
சென்னையில் மீண்டும் பால் தட்டுப்பாடு.. 8 மணி வரை பால் வராததால் பொதுமக்கள் அதிருப்தி..!
சென்னையில் மீண்டும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் பால் தட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது மீண்டும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
அம்பத்தூர் பால்பண்ணையிலிருந்து காலை 4 மணிக்கு வர வேண்டிய பால் 8 மணி வரை வரவில்லை என அண்ணா நகர் அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.
இன்று காலை 8 மணி வரை ஆவின் பால் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் பால் பண்ணையில் பால் பாக்கெட் உற்பத்தியில் உற்பத்தி பிரச்சனையில் 15க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்களில் பால்பாக்கெட் ஏற்றப்படாமல் பண்ணைக்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆவின் பால் கிடைக்காததால் அதிக விலையுள்ள தனியார் பாலை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்று உள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
