1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (17:43 IST)

அறப்போர் இயக்கத்தின் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த இபிஎஸ்!

நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு புகாரளித்த அறப்போர் இயக்கத்தின் மீது ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு இபிஎஸ்  மான  நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான முறைகேடு வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில்  இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜூலை 26 ஆம் தேதி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில், எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது அரசின் கொள்கை, அதில், அறப்போர் இயக்கம் தலையிட முடியாது.  ஊடகத்தில் வரும் செய்திகளின் அடிப்படையில் என் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதால், என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும்  நோக்கில் புகாரளிக்கப்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு புகாரளித்தத அறப்போர் இயக்கத்தின் மீது ரூ.1 கோடி இழப்பீடு கேட்டடு இபிஎஸ்  மான  நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.