தொடர்புடைய செய்திகள்
- சென்னை அண்ணா நகரில் நடிகையின் செல்போன் பறிப்பு
- திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!
- செங்கல்பட்டு - தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து
- சேலம் 8 வழிச்சாலை இன்னுமொரு தூத்துக்குடி சம்பவம் போல் அமைய கூடாது–தமிழிசை செளந்தரராஜன்
- மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: ஆதார் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவு
தமிழிசையை தாக்க முயன்ற இளைஞர் கைது
பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசையை, இளைஞர் ஒருவர் தாக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிங்கபெருமாள் கோவிலில், பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை தாங்கினார்.
இந்நிலையில் தமிழிசை மேடையில் அமர்ந்திருந்த போது மேடையில் வேகமாக ஏறிய இளைஞர் ஒருவர், தமிழிசையை தக்க முற்பட்டார். உடனடியாக அங்கு இருந்த தொண்டர்கள், அந்த இளைஞரை தடுக்க முயன்றனர். இருந்த போதிலும் அந்த இளைஞர் தொண்டர்களை சரமாரியாக தாக்கினார்.
உடனடியாக அங்கு வந்த போலீஸார், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த வாலிபர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் அந்த வாலிபரை கைது செய்தனர். இதனால் அக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
