1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (14:34 IST)

தமிழகத்தில் கரும்பூஞ்சை - கிருஷ்ணகிரியில் மூவர் பலி!

கிருஷ்ணகிரியில் 67 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 67 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

 
இந்தியா முழுவதும் கொரோனாவை தொடர்ந்து கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் 67 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 67 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட 67 பேரில் 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் கரும்பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.