1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (23:15 IST)

சிறுமியின் உயிரை காப்பாற்ற 63 பேர் ரத்த தானம் !

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் காவியா. இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைப்  பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் உயிருக்குப் போராடி வரும் சிறுமி  காவியாவுக்கு தேவையான ரத்தத்தை தானம் செய்ய வில்லாபுரம்   பகுதியில் வசிக்கும் நபர்கள் ரத்த தான முகாம் செய்ய முன் வந்தனர்.

இந்த முகாமில் ரத்த தானம் செய்த 63 பேருக்கு  சிறுமியின் தந்தை நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சிறுமியின் உயிரைக் காப்பாற்ற ரத்த தானம் செய்த நபர்களின் செயலை அனைவரும் பாராட்டினர்.