ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (18:13 IST)

பைக்ரேஸில் ஈடுபட்ட 37 இளைஞர்கள் , 2 சிறுவர்கள் கைது !

சென்னையில் கடந்த 10 நாட்களில் மட்டும் பைக்ரேஸில் ஈடுபட்ட 37 இளைஞர்கள் , 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தற்போது இளஞ்சிறார் பாதுகாப்புச் சட்டப்படி இளைஞர்கள பைக் ரேஸில் ஈடுபட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் பைக்ரேஸில் ஈடுபட்ட இளைஞருக்கு  நூதன தண்டனை கொடுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பைக்ரேஸில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞர் பிரவீனை  ஸ்டான்லி அரசு மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாயாக ஒருமாதம் பணியாற்ற சென்னை   நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.