வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (14:57 IST)

விடுதியில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம்....அறங்காவலர் உள்ளிட்ட 3 பேர் கைது

திருப்பூர் அருகே 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில்  விடுதி நிர்வாக அறங்காவலர் உளிட்ட 2 பேரை கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம்  திருமுருகன் பூண்டியில் ஆதரவற்ற குழந்தைகள் விடுதியாகச் செயல்பட்டு வரும்   விவேகானந்தா  சேவாலய விடுதியில் காலை   உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் ,  ஒவ்வாமை ஏற்பட்டு, உயிரிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சமூக  நலத்துறை அமைச்சர், கீதா ஜீவன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் மற்றும் அதிகாரிகள் சமீபத்தில், அந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது, மாணவர்கள் தங்கியிருந்த இடம், இறந்து இடம், அவர்களுக்கு வழங்கப்பட்ட உனவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இன்றி செயல்படுவதால், காப்பகம் மூடப்படுவதாக அறிவிப்பட்டது.

இந்த  நிலையில்,  திருமுருகன் பூண்டியில் கடந்த மாதம் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் 3 சிறுவர்கல் உயிரிழந்த வழக்கில் விடுதி அறங்காவலர், விடுதி காவலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj