வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (16:51 IST)

’’டாஸ்மாக்’’ கடைகள் 2 நாள் அடைப்பு ! மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், சமீபத்தில்  கொரோனா அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியர் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவதால் இந்த இரண்டு தினங்கள் மட்டும் ,திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியர் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.