1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (14:31 IST)

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை

வளிமண்டல மேலடுக்கு சூழற்சியால் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. 
 
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது தமிழகத்தில் 21 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் ,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை , திருப்பத்தூர், வேலூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.