ராமநாதபுரத்தில் திடீரென 144 தடை அமல்.. என்ன காரணம்?
ராமநாதபுரம் மாவட்டத்தில், இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதற்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடை இன்று முதல் செப். 15 வரையிலும், அக். 25 முதல் அக். 31 வரையிலும் அமலில் இருக்கும்.
இந்த உத்தரவின்படி, வெளி மாவட்ட வாகனங்கள் அனுமதி இன்றி ராமநாதபுரத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் இருந்து வரும் நபர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கவும், அமைதியை பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தடை உத்தரவு, மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran
