1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (08:26 IST)

சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
நடராஜர் கோயிலை மையமாக வைத்து தொடர் போராட்டங்கள் நடந்த நிலையில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் நேற்று பிறப்பித்திருந்தார். இதற்கு பக்தர்கள் தரப்பில் பல்வேறு கருத்துக்கள் எழுந்த நிலையில் இன்று கோட்டாட்சியர் ரவி தடை உத்தரவை திரும்ப பெற்றுள்ளார். 
 
அதாவது சிதம்பரம் நகரில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் பக்தர்கள் நலனுக்காக இந்த தடை உத்தரவு விளக்கி கொல்லப்படுவதாக கோட்டாசியர் ரவி தெரிவித்தார்.