தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் திடீரென சீல் வைக்கப்பட்ட 130 கடைகள்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி!
- சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
- சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
- காதல்ஜோடி இன்று வேலை இல்லாததினால் ராவாக அடித்து மட்டையான நிலை ?
- வடபழனியில் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து: பொதுமக்கள் அச்சம்!
11 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை !
சென்னை கோயம்பேட்டில் 11 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னை அடுத்த கோயம்பேட்டில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அந்தோனி தினேஷ். இவரை பெற்றோர் எதோ காரணத்திற்காக கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவர் வீட்டில் தனியாக இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
