1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:36 IST)

1 - 5 ஆம் வகுப்புக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை?

1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை. 

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வீசி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக மே மாதத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும் நிலையில் இந்த ஆண்டில் மே மாதத்தில்தான் தேர்வுகள் நடைபெற உள்ளன.
 
ஆனால் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளிகள் செயல்படும் நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி வரை என மாற்றியமைக்க வேண்டுமென முன்னர் கோரிக்கை விடப்பட்டது .
 
இந்நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல்.