1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2022 (18:57 IST)

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்கைக்கு புதிய தடை

Kendhriya
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு புதிய தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது 
 
மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர் மத்திய மாநில அரசு அலுவலக ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இந்த பள்ளிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது 
 
மேலும் இத்தகைய பள்ளிகளில் சேர்ப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரைக் கடிதமும் வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. இந்த நிலையில் இனிமேல் எம்பிக்களுக்கு என சிறப்பு ஒதுக்கீட்டு இல்லை என தடை விதித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது 
 
எனவே எம்பிக்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் படி கேந்திரிய வித்யாலா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது