செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தொல்லை தரும் சளி பிரச்சனையை சரிசெய்ய என்ன செய்யவேண்டும்...?

சளி தொந்தரவை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றினால் சாதாரண சளி நோய் குறைபாடு ஏற்படுகிறது; பல்வேறு வகையான வைரஸ்கள் சளியை ஏற்படுத்துபவையாக  திகழ்கின்றன.பெரும்பாலான நேரங்களில், உடலில் ஏற்படும் சளித்தொற்று அதிக காலத்திற்கு நீடிக்காது; சில மக்களுக்கு ஒரு சில நாட்களில் அல்லது ஒரு வாரத்தில் கூட சளி  பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆனால், இந்த கால அளவை மீறி சளி பிரச்சனை தொடர்ந்தால், அச்சமயத்தில் மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
 
வைத்தியம் 1: நீர், உப்பை பயன்படுத்தி வாய் கொப்புளித்தல் முறையின் மூலம் சளி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். தேவையான பொருட்கள்: ஒரு தம்ளர் வெந்நீர்,  1 தேக்கரண்டி உப்பு, உப்பினை வெந்நீரில் கலந்து கொப்புளிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இருமுறை செய்யலாம்
 
பொதுவாக சளி பிரச்சனையுடன் ஏற்படும் தொண்டைப்புண்ணை இதமாக்க இந்த வெந்நீர் கொப்புளித்தல் உதவும்; தண்ணீர் தொண்டையை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும் மற்றும் உப்பு ஏற்பட்ட நோய்த்தொற்றை எதிர்த்து போராட உதவும்.
 
வைத்தியம் 2: கருப்பு மிளகு கஷாயம் மூலம் சளி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். தேவையான பொருட்கள்: ½ தேக்கரண்டி புதிய கருப்பு மிளகு, 1 கப் மிதமான  சுடுநீர். நீரில் மிளகு பொடியை நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை குடிக்கவும். 
 
இவை சளியின் போக்கை கட்டுப்படுத்த கருப்பு மிளகு உதவும் மற்றும் தும்மலை நிறுத்த பயன்படும். தொண்டையில் ஏற்பட்ட வலி, இருமல் போன்றவற்றில்  இருந்து நிவாரணம் பெற உதவும்.
 
வைத்தியம் 3: இஞ்சி கஷாயத்தை பயன்படுத்தி,  சளி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். தேவையான பொருட்கள்: 1 அங்குல இஞ்சி துண்டு, 1 கப் சுடுநீர்
1 தேக்கரண்டி தேன்.
 
இஞ்சித்துண்டை நசுக்கி, ஒரு சில நிமிடங்களுக்கு சுடுநீரில் ஊற வைக்கவும். இந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இவ்வாறு தயாரித்த இஞ்சி  தேநீரை குடிக்கவும். இஞ்சி பேஸ்ட் அல்லது நசுக்கிய இஞ்சியை சூடான சூப் மற்றும் உணவு வகைகளில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம் மற்றும் இது சளியை  எதிர்த்து போராடவும் பயன்படும்.
 
பலன்கள்: இஞ்சி என்பது வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் ஆகும்; இது சளி தொந்தரவு, சளியின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளித்து,  உடல் சூட்டை சரியான அளவில் வைக்க உதவும். இஞ்சி, மூக்கிற்கு இதமளிக்கும் மணத்தை கொண்டுள்ளது; இதில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட்டுகள்  நிறைந்துள்ளன. இஞ்சியில் இயற்கையாகவே நிறைந்திருக்கும் காரத்தன்மை மூக்கடைப்பை சரி செய்து, நாசி பாதையை சீராக்க பயன்படும்.