தொடர்புடைய செய்திகள்
- தினமும் பப்பாளி சாப்பிடுவதால் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா...!
- தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனை இனி இல்லை....!
- பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை எப்படி போக்கலாம்....?
- மருத்துவ தன்மை அதிகம் உள்ள வெட்டிவேர் எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...!
- வெண்டைக்காய் ஊற வைத்த நீர் குடிப்பதால் என்ன பயன்கள் தெரியுமா....?
உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துகள் நிறைந்த புதினா...!
புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
புதினா இலையில் வைட்டமின் “பி” சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும். புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக் குணமாக்கும்.
புதினா எண்ணெய் தலைவலி, வாதம் மற்றும் பிற வலிகள் போன்றவற்றிற்காக தடவுகின்ற களிம்பு, வயிற்றுக் கோளாறு மருந்துகள், இருமல் மருந்துகள், வாய் கொப்பளிக்கும் தைலம் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகின்றது.
புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் துர்நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலசிக்கலும் நீங்கும். மேலும் ஆன்மை குறைவை நீக்கும்.
ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகிறது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
மஞ்சள் காமாலை, வாதம் வரட்டு இருமல், சோகை நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், புதினாக் கீரை குணப்படுத்துகிறது.
அடுத்த கட்டுரையில்
