1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (10:18 IST)

இப்படி செய்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்குமா...!!

ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால், உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியில் குறைவு அல்லது இரத்த சிவப்பு அணுக்கள் அழிக்கப்படுவது அல்லது இரத்தத்தின் அதிகப்படியான இழப்பு இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது.


இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நம் அன்றாட உணவில் பீட்ரூட்டை சேர்க்க வேண்டும். இதை பொரியல் அல்லது ஜூஸ் செய்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.

பேரீச்சம் பழம் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஒரு உணவாகும். இரவில் 2-3 பேரீச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து காலையில் உண்ணலாம்

அத்திப்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது, 4-5 அத்திப்பழங்களை தினமும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து, தினமும் காலையில் அவற்றை சாப்பிடலாம், அல்லது தேனில் ஊறவைத்த உலர் அத்திபழத்தை தினமும் சாப்பிடலாம்.

மாதுளம் பழம் உணவிலிருந்து இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது, இதனால் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

தினமும் உணவில் அக்ரூட் பருப்புகள், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு மற்றும் உலர் திராட்சை போன்ற உலர்ந்த பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவை இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.