தொடர்புடைய செய்திகள்
- சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
- ஆஸ்துமாவிற்கு நிவாரணம் சித்த மருத்துவமும் பயன்களும் !!
- காளையார்குறிச்சி வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்!
- பல்வேறு துயரச் சம்பவங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு!
- போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 1000 - அமைச்சர் அறிவிப்பு
வெங்காயத்தாள் எதற்கெல்லாம் நிவாரணம் தருகிறது தெரியுமா...?
வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் பல நன்மைகள் உள்ளன.
வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது. வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2, வைட்டமின் கே போன்ற பல வைட்டமின்கள் அடங்கியுள்ளன.
காப்பார், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவையும் உள்ளன.
வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்கும். இதில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயப்பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும்.
அடுத்த கட்டுரையில்
