1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (12:33 IST)

உடல் ஆரோக்கியத்திற்கான சோற்றுக்கற்றாழையின் பயன்கள் !!

சோற்றுக்கற்றாழை அனைத்து வகையான காயங்களுக்கு சிறந்த மருந்தாகும். தொடர் ஆய்வுகளின் படி, தோல் பராமரிப்பு; வெட்டுக்கள், தீக்காயங்கள், வேணீர் கட்டி, உறைவு மற்றும் கதிர்வீச்சு எரிதல் ஆகியவற்றில் சிகிச்சைமுறைகளை இது அதிக பயனுள்ளதாக ஆக்கும்.


அல்சர், அழற்சி குடல் நோய்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை சரி செய்வதற்கு சோற்றுக்கற்றாழை களிம்பு மற்றும் மர பால் பயன் படுத்தப்படுகின்றன .இது ரத்தப் புற்றுநோய்கள் சிகிச்சைகளுக்கும் பயன்படுகின்றன. இருப்பினும், மருத்துவர் ஆலோசனைகள் பெற்று சரிவர இதனை பயன்படுத்த வேண்டும்

சோற்றுக்கற்றாழையின் களிம்பு வாயின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, இது பிளேக்-விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து ஜினீய்டிடிஸை தடுக்கிறது.  சோற்றுக்கற்றாழை களிம்பு பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் கொடுக்காமல் வாய் புண்களை தவிர்த்து, சரி செய்ய பயன் உள்ளதாக இருக்கும்.

சோற்றுக்கற்றாழை, நுண்ணுயிர் தொற்று காரணமாக ஏற்படும் சேதம் மற்றும் பொதுவாக ஏற்படும்   தீவிர சேதத்தை குறைக்கிறது. இது வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், உறுப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

சோற்றுக்கற்றாழை களிம்பை ஒரு இரத்தச் சர்க்கரைக் குறை பொருளாக பயன்படுத்த அதிகமாக ஆய்வுகள் செயல் பட்டு வருகின்றன. பெரும்பாலான ஆய்வுகள் நீரிழிவு நோயை குறைப்பதில் இதன் பங்கை   உறுதிப்படுத்துகின்றன. இறுதி கட்ட ஆய்வுகள் தற்போது சிகிச்சை பயன்பாட்டிற்கான அளவையும், பாதுகாப்பையும் தீர்மானிக்கும் நிலையில் உள்ளன.

சோற்றுக்கற்றாழையில் இருக்கும் ஈரப்பசை உங்கள் உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கிறது. இது உங்கள் முடியை பராமரிக்க உதவுகிறது. மேலும் முடி வளர்ச்சிக்கும், முடி கொட்டுவதை தடுக்கின்றன மற்றும் முடி நரைப்பதை குறைக்கின்றன.