1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kanimozhi mp, mentioned thirukkural in her x page

ஆ.ராசா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி!.. அவர் சொன்னாலும் கேட்க மாட்டாங்களே!..

kanimozhi
திமுகவை பொருத்தவரை ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி.. எதிர்கட்சியாக இருந்தாலும் சரி.. அவர்களில் சிலரின் மேடைப்பேச்சுகளில் எப்போதும் ஆபாசங்கள் கலந்திருக்கும். அதுவும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பேசும் போது காதை மூடிக்கொள்ள வேண்டியதுதான்..

அதில் கடை நிலை பேச்சாளர் மட்டுமல்ல.. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களில் சிலரே மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசும் பழக்கம் கொண்டவர்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் திமுக எம்பி ராசா.கோபம் வந்தால் அவரின் வார்த்தைகளில் அவதூறும், ஆபாசமும் தாண்டவம் ஆடும்..

சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் சிடி நிர்மல்குமார் ஆகியோர் முக ஸ்டாலின் மிசா காலத்தில் கைது கைது செய்யப்பட்டது பற்றி பேசியது திமுகவினரிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசா ‘மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என ஒருவர் சொல்கிறார்.. அவர் யாருக்கு பிறந்தார் என நான் சந்தேகப்படுகிறேன்’ என கூறினார். அதேபோல் அமைச்சர் சேகர் பாபு முதல்வர் விஜயை பற்றி பேசும் போது ’ஓடுகாலி நாயே.. ஓடுகாலி நாயே.. உனக்கு பாடம் புகட்டுவோம்’ என பேசினார்..

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டம் தெரிவித்து வருகிறார்கள். திமுக இப்படி பேசுவதால்தான் தற்போது எதிர் கட்சியக அமர்ந்திருக்கிறார்கள்.. இவர்கள் இன்னமும் திருந்தவில்லை.. திருந்தப்போவதும் இல்லை’ என பலரும் சொல்கிறார்கள்.


இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் களத்தில் ‘யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்கிற திருக்குறளை பதிவிட்டுள்ளார்.
அதாவது யாராக இருந்தாலும் நிதானமாக பேசுவது நல்லது என திருக்குறளை அவர் உதாரணமாக காட்டியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
திமுக போட்ட திட்டம்லாம் பணாலாயிடுச்சே!.. ஸ்கோர் பண்ணிய அஜித் - விஜய்!...