வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (07:30 IST)

டிக் டாக் வீடியோ மோகத்தால் கணவனை பிரிந்து காணாமல் போன இளம்பெண்: திடுக்கிடும் தகவல்

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆதோனி என்ற பகுதியில் டிக் டாக் மோகத்தில் இருந்த ஒரு பெண்ணை அவரது கணவர் கண்டித்ததால் குழந்தைகளுடன் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஆந்திர  மாநிலத்தைச் சேர்ந்த ஆதோனி என்ற பகுதியில் ரவிக்குமார்-அர்ச்சனா என்ற தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு திடீரென டிக்டாக் மீது மோகம் ஏற்பட்டுள்ளது
 
மேலும் டிக்டாக்கில் அஞ்சலி என்ற பெண் அவருக்கு நெருக்கமான நட்பாகி உள்ளார். இருவரும் இணைந்து பல டிக்டாக் வீடியோக்களை பதிவு செய்து அவ்வப்போது வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் அர்ச்சனாவின் வீட்டிற்கு வந்த அஞ்சலி ஒரு வாரம் தங்கி இருந்ததாகவும் இந்த ஒரு வாரத்தில் இருவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது
 
இதனை அவரது அர்ச்சனாவின் கணவர் ரவிக்குமார் கண்டித்துள்ளார். கணவர் கண்டித்ததால் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்ற அர்ச்சனா, தாய் வீட்டிலும் அஞ்சலியின் நட்பை கண்டித்ததால் குழந்தைகளுடன் திடீரென காணாமல் போய்விட்டார்
 
அர்ச்சனா, அஞ்சலியை தேடி சென்று இருக்கலாம் என ரவிக்குமாரின் குடும்பத்தினர் கருதி, அஞ்சலி வீட்டுக்கு சென்ற போது அங்கும் அவர் இல்லை. தற்போது அர்ச்சனா குழந்தைகளுடன் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இதுகுறித்து புகாரின் அடிப்படையில் போலீசார் அர்ச்சனாவை தேடி வருகின்றனர். டிக் டாக் மோகத்தில் மூழ்கிய பெண்ணை கணவர் கண்டித்ததால் குழந்தைகளுடன் காணாமல் போன இளம் பெண்ணால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது