1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 22 ஜூன் 2022 (13:24 IST)

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை

thackery
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 இதனை அடுத்து இன்று நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளன
 
 ஏற்கனவே சமீபத்தில் நடந்த சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பலர் திடீரென காணாமல் போனதால் மகாராஷ்டிர மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது