1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (15:02 IST)

யூஜிசி அனுப்பியதாக கூறும் கடிதம் பொய்யானது: அதிகாரிகள் விளக்கம்!

யூஜிசி அனுப்பியதாக கூறும் கடிதம் பொய்யானது: அதிகாரிகள் விளக்கம்!
செமஸ்டர் தேர்வுகளும் நேரடி தேர்வாக நடைபெறும் என யுஜிசி அனுப்பியதாக கூறும் கடிதம் பொய்யானது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
செமஸ்டர் தேர்வுகள் நேரடித் தேர்வுகளாக நடக்கும் என யுஜிசி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியானது
 
டிசம்பர் 10ஆம் தேதி என குறிப்பிடப்பட்டு வெளியான அந்த கடிதம் தங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை என யுஜிசி அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர் 
 
யுஜிசி கடிதத்தை போல யாரோ போலியாக கடிதத்தை தயாரித்துள்ளனர் என்றும் அந்த போலி கடிதம் தான் சமூக வலைதளங்களில் உலா வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். யுஜிசி அதிகாரிகளின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது