1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (09:55 IST)

சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு: நேற்று போல் ஏமாற்றுமா?

sensex
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று ஆரம்பத்திலேயே 300 புள்ளிகள் உயர்ந்துள்ளது ஆனால் நேற்று போல் ஏமாற்றுமா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஆரம்பத்தில் 200 புள்ளிகள் உயர்ந்தாலும், மாலையில் திடீரென சரிந்தது. இந்த நிலையில் இன்று பங்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் 300 புள்ளிகள் வரை உயர்ந்து 53,800 என்ற அளவில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 90 புள்ளிகள் வரை உயர்ந்தது 16 ஆயிரத்து 52 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
 
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட நாள் முதலீடாக பங்கு சந்தை சிறந்ததாக பார்க்கப்படுகிறது