1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (10:07 IST)

2 நாள் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்!

share
இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று சென்செக்ஸ் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். 
 
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய உடன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து 54,089 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 60 புள்ளிகள் அதிகரித்து 16129 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டு நாள் இறங்கினாலும் இன்று பங்குச் சந்தை ஏற்றம் கண்டிருப்பது பலருக்கும் நம்பிக்கை அளித்து உள்ளது. மேலும் அடுத்து வரும் இரண்டு நாட்களிலும் பங்குச் சந்தை உயரும் என்று பங்குச் சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.