1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (09:29 IST)

பங்குச்சந்தை இன்றும் உயர்வு: வாரம் முழுவதும் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி!

share
பங்குச்சந்தை இந்த வாரம் திங்கட்கிழமை உயர்வுடன் தொடங்கிய நிலையில் இந்த வாரம் முழுவதுமே உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த வாரம் நான்கு நாட்களும் பங்குச்சந்தை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தில் இருட்ந்ஹு மீட்டுக் கொடுத்த நிலையில் இன்றும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளது 
சற்றுமுன் பங்குச் சந்தை சுமார் 150 புள்ளிகள் உயர்ந்து 54 ஆயிரத்து 363 என்ற புள்ளியில் விற்பனையாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 60 புள்ளிகள் உயர்ந்து 16190 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்குச்சந்தை ஒரு வாரம் முழுவதும் உயர்ந்து உள்ளது மிகப்பெரிய பாசிட்டிவாக பார்க்கப்படுவதாக முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்