1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:13 IST)

தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை!

sensex
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
இந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 575 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனைஅடுத்து சென்செக்ஸ் 59034 என வர்த்தகம் முடிந்துள்ளது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 168 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 639 என வர்த்தகம் முடிந்துள்ளது.