சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (22:36 IST)

ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணி மீது மின்சாரம் தாக்கி பலி!

west bangal
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் மீது மின் சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் ரயிலில் பயணம் செய்த மாணவி ஒருவர் ரயிலில் இருந்து கீழே விழும் போது தவறி விழுந்து விழுந்து விட்டார்.  ஒன்றரை மணிநேரம் போராடிய அந்த மாணவியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது அவருடைய உள் உறுப்புகள் செயல் இழந்ததால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அன்று இதே நாளில் மற்றொரு சம்பவம்  நடந்துள்ளது, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இன்று இரண்டு பேர் தண்டவாளத்தின் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் மீது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் அவர் தண்டவாளத்தில் விழுந்து பலியானார்.

மற்றொரு நபர் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பினார், இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.