வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (23:25 IST)

பணிக்கு வந்த கடைசி நாளில் அலுவலத்தில் தூங்கிய அதிகாரி.. வைரல் மேன்

கேரளாவில் பணியாற்றி வந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஜாகொப் தாமஸ், 35 ஆண்டுகள்  அனுபவம் உள்ளது. தனது பணிகாலத்தின்போது வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே காக்கிச் சட்டை அணிந்துள்ளார். ஆனால் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது பணிகாலத்தில் இறுதி பணியாக கேரள அரசின் உலோக கருவிகள் தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான மெட்டல் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராக பொற்ப்பு வகித்து வந்த நிலையில் நேற்று அவர் ஓய்வு பெற்றார்.

எனவே,இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எனது பணிக்காலத்தின் கடைசி நாளின் போது அலுவலக்த்தில் உறங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.