1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 24 ஏப்ரல் 2021 (11:42 IST)

புதுவையில் நேற்று இரவு 10 மணி முதல் 2 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது!

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
 
குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலத்தில் இந்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க மத்திய அரசுமாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இந்நிலையில் ஞாயிற்று கிழமை துவங்கி திங்கள் கிழமை காலை 5 மணி வரை புதுவையில் ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசு கூறியுள்ளது.