வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 4 மார்ச் 2020 (18:31 IST)

அமைச்சரிடம் செல்போன் பறிப்பு... போலீஸாருக்கு கெடு விதித்த டிஜிபி !

அமைச்சரிடம் செல்போன் பறிப்பு... போலீஸாருக்கு கெடு விதித்த டிஜிபி !

புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக் கண்ணன் காலையில் கடற்கரையில் சாலையில் நடைப்பயிற்சி சென்றபோது, பைக்கில் வந்த இருவர், அமைச்சரின் ரூ, 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர். 
 
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து ஒதியன் சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் வலைவீசித் தேடி வந்தனர். 
 
இந்நிலையில், புதுச்சேரி மாநில காவல்துறை டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்வா, செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க வேண்டும் என அம்மாநில போலீஸாருக்கு கெடு விதித்துள்ளார்.