1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (18:31 IST)

திருமணமான பெண் காதலருடன் சேர்ந்து வாழலாம் என நீதிமன்றம் தீர்ப்பு! கணவர் அதிர்ச்சி

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் ஜிம் பயிற்சியாளர் ஒருவர். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன்(10வயது) மற்றும் மகள்( 6 வயது)  உள்ளனர்.

ஜிம் பயிற்சியாளரின் மனைவிக்கு சமூக வலைதளம் மூலம் ஒருவர் பழகியுள்ளார், அது நாளடையில் காதலாக மாறியது.  அதன்பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு அவர்  சமூக வலைதளம் மூலம் பழக்கமான  நபருடன் ஓடிவிட்டார். அவருடன் வாழப்போவதாக கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜிம் பயிற்சியாளர்,  உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார். அங்கு தன் மனைவி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக புகாரளித்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் மே 4 ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென்று போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டனர்.

அவர், தன் கணவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால், பரிதாபாத்தை சேர்ந்த ஒருவருடன் தான் முழு விருப்பத்தோடு வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் அப்பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினர்.

மேலும், இத்தீர்ப்பை எதிர்ப்பு ஜிம் பயிற்சியாளர் அதிர்ச்சியடைந்தார். வழக்கறிஞர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.