வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (11:24 IST)

நாகதோஷ பரிகாரம் என்ற பெயரில் குழந்தை பலி! – மூடநம்பிக்கையால் கொடூரம்!

தெலுங்கானாவில் பரிகாரம் செய்வதாக 6 மாத குழந்தையை தாயே பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக மூட நம்பிக்கைகளின் பேரில் குழந்தைகளை பலி கொடுக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அப்படியான ஒரு சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சூர்யபேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் ஜோதிடம் பார்க்க ஜோசியக்காரர் ஒருவரிடம் சென்றுள்ளார். அந்த ஜோசியர் அந்த பெண்ணுக்கு நாகதோஷம் இருப்பதாக கூறியதாக தெரிகிறது. மேலும் அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய பூஜைகள் நடத்தி பெண்ணின் 6 மாத குழந்தையை பலி கொடுக்க வேண்டும் என சொல்ல, அந்த பெண்ணும் ஒப்புக்கொள்ள நிவர்த்தி என்ற பெயரில் குழந்தையை கொன்றுள்ளனர்.

இந்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஜோசியரை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.